மகிழ்மலர் – 2

மகிழ்க்குட்டி.

நான் இதுவரை

எழுதியது ஒரே கவிதைதான்.

அந்தக் கவிதை

நித்தமொரு

குட்டி போடுகிறது.

———————————

வெயில்நேரப் பனி

துயிலெழுங் கனவு

உதிர்கால இலை

மழைவிழும் அழுக்கு

புயல்படுஞ் சுடராகக்

கடலோரத்தில்

அவள்​ சுவடுகள்.

சட்டென்று

மின்சுருளில் படம்பதித்தேன்

அடுத்த

அலைவந்து கலைக்குமுன்.

2 Responses to மகிழ்மலர் – 2

  1. kmohanonline சொல்கிறார்:

    அருமையிலும் அருமை கண்ணா!

பின்னூட்டமொன்றை இடுக