மகிழ்க்குட்டி.
நான் இதுவரை
எழுதியது ஒரே கவிதைதான்.
அந்தக் கவிதை
நித்தமொரு
குட்டி போடுகிறது.
———————————
வெயில்நேரப் பனி
துயிலெழுங் கனவு
உதிர்கால இலை
மழைவிழும் அழுக்கு
புயல்படுஞ் சுடராகக்
கடலோரத்தில்
அவள் சுவடுகள்.
சட்டென்று
மின்சுருளில் படம்பதித்தேன்
அடுத்த
அலைவந்து கலைக்குமுன்.
அருமையிலும் அருமை கண்ணா!
மோகன் – நன்றி!