Subramania Bharati’s Letters: a treasure trove
Early views of nationalist-poet Subramania Bharati
“Without social reform, our political reform is a dream, a myth, for social slaves can never understand political liberty.” – காந்தியும் பாரதியும் ஒரே தளத்தில்தான் சிந்தித்திருக்கிறார்கள்.
பாரதியின் மொத்த எண்ணங்களின் சாரம் இந்தக் கடிதத்தில்…உரைநடையிலும் கவிதையின் காரம் மாறாமல்:
“தம்பி – நான் ஏது செய்வேனடா
தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது
தம்பி – உள்ளமே உலகம்
ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே! மேலே!
நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி
உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! – மேலே மேலே! மேலே!
**
தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது
தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது
அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது
தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது
ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது
பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது
பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது
தொழில்கள், தொழில்கள் என்று கூவு
தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.
வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக
முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு
சக்தி ! சக்தி! சக்தி! என்று பாடு “