ஆம்னிபஸ் தளத்தில் ப.சிங்காரம் குறித்து, சென்ற மாதம், ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.
———————-
ப.சிங்காரம் இன்று தமிழின் பலதரப்பட்ட முன்னணி எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் பெருமளவில் கொண்டாடப்படுகிற மிகச்சில எழுத்தாளர்களில் ஒருவர். ஆனாலும் ஒரு மிகக்குறுகிய இலக்கிய வட்டத்திற்கு வெளியில் பெயர் தெரியப்படாத பலப்பல எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். மிகுந்த எதிர்பார்ப்போடுதான் அவரது ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை படிக்கத் தொடங்கினேன். பின்னர் ‘கடலுக்கு அப்பால்’ நாவலையும் படித்தேன். இந்தப் படைப்புகளை அறியுமுன் சிங்காரத்தைப் பற்றிய சித்திரம் அவசியமாகவே உள்ளது. ந.முருகேசபாண்டியன் எழுதியுள்ள அறிமுகக் கட்டுரைகளிலிருந்து அத்தகைய ஒரு சித்திரம் கிடைக்கிறது.