இந்த அரசாங்கம் நல்ல நோக்கத்தோடுதான் குடியுரிமைச் சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்திருப்பதாக நம்ப விரும்புபவர்கள், அமித் சாவின் இந்தப் பேச்சுகளைக் கேட்க வேண்டும்.
மிகவும் சாமார்த்தியமாக, அகதிகள் ஊடுருவிகள் என்று இரு பிரிவுகளைக் கட்டமைத்துப் பல இடங்களில் மிக வெளிப்படையாகவே வெறுப்பைக் கக்குகிறார். வெளிநாட்டிலிருந்து வந்த (அல்லது இந்நாட்டினர் என்று நிரூபிக்கமுடியாத) முஸ்லிம்கள் மட்டும் ஊடுருவிகள், பிறரெல்லாம் அகதிகள் என்று எப்படி ஆகமுடியும்?
CAA, NRC ஆகிய திட்டங்களுக்கிடையே ஏதோ மிகையான இணைப்பைப் போராட்டக்காரர்கள் ஏற்படுத்திவிட்டதாக நினைக்கவேண்டாம். இந்த அரசாங்கமே தனது நோக்கமாக இதைத்தான் பலமுறை அறிவித்திருக்கிறது.
CAA, NRC ஆகிய இரண்டையும் ஆதரிப்பதாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் தங்களுடைய முகநூல் சுயவிவரப் படத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை இந்த வன்மமான திட்டத்தின் மூலம் அவர்களது கட்சி எதைச் செய்ய நினைக்கிறது என்பதில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.
இது பாதிக்கப்பட்ட சிலரை இணைப்பதற்கான திட்டமன்று. பலரை நீக்குவதற்கான திட்டம். இதில் இத்திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும் சரி, அல்லது தீவிர ஆதரவாளர்களுக்கும் சரி, எவ்வித ஐயமும் இல்லை. நடுவில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறவர்கள்தான இந்த அரசுக்கு சில நற்பண்புகளைக் கற்பிக்கிறார்கள். அத்தகைய நல்லெண்ணம் இருப்பதாகக் காட்டிக்கொள்ள அவர்களேகூட விரும்புவதில்லை.