ஒரு மரணத்தில் பிறந்த இரு கவிதைகள்

மே 10, 2011

1)

பெரிய மனிதர்கள்
கொலையுண்டு இறந்தால்
வன்முறையில் வெடிக்கிறோம்.
தெரிந்தவர்கள்
உறவினர்கள் இறந்தால்
கதறிக்கதறி நடிக்கிறோம்.
கூப்பிடு தூரத்தில்
பல்லாயிரம் உயிர்கள்
பலியானால் எதுவும்
நடக்காதது போல் கடக்கிறோம்.
தீவிரவாதிகள் இறந்தால்
கைகொட்டிச் சிரிக்கிறோம்.
அட,
சக மனிதனின்
மரணத்திற்காக
மௌனமாய் வருத்தப்படலாம்
என்பது மறந்தேவிட்டது.

2)

நல்ல வேளை
ஒசாமா என் பக்கத்து வீட்டில் இல்லை.
அது எப்படி தெரியாமலிருந்திருக்கும்
என்ற கேள்வி வந்திருக்கும்.
இன்றைய தினத்தில்
எங்கள் அடுக்குமாடிக்
கானகத்தில்
பக்கத்து வீட்டில்
ஒசாமா என்ன
ஒபாமேவே வந்தாலும்
தெரியாது.