நீண்ட நாள்களுக்குப் பிறகு சமகாலக் கட்சியரசியல் பற்றி எதுவும் குறிப்பிடாமல் திருக்குறள் குறித்து இவ்வாரம் ஒரு நீண்ட உரையாற்றினேன். வள்ளுவன் அரசியல் பற்றிச் சொன்ன சில குறள்களை மட்டும் சொல்லிவைத்தேன்.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (546)
இயற்றலு மீட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம். (386)
முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும். (388)
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு முலகு. (389)
எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்ததாற் றானே கெடும். (548)
தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (444)
இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (448)
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். (113)
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து. (551)
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்கும் படை. (555)
குடிதழிக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கு முலகு. (544)