அலுவலக வேலையாய்
வேற்றூர் சென்று திரும்பினேன்.
அலுவலகத்திலிருந்து அனுப்பிய
குளுகுளு இனோவாவில்.
புறநகர் தொட்டதலிருந்தே
மழை; வாகன நெரிசல்;
ஓட்டுநர் பாடு திண்டாட்டம்தான்.
‘இரண்டு நாட்பயணமாயிற்றே:
அன்பளிப்பாய் ஐம்பது ரூபாய் தரலாமா?
பத்து ரூபாய் போதுமோ?’
வீடு வந்தது.
ஐம்பது ரூபாய் கொடுத்தேன்.
“வேண்டாம் சார். நான் வாங்கறதில்ல.”