ஞாயிற்றுக் கிழமை, என்
பெற்றோர்க்கு விடுமுறைதான்.
ஆனால், ஏனோ, என்
செவிலித்தாய்க்கு இன்றுமில்லை
விடுமுறை.
———————————————
ஜாதிஜாதி என்கிறார்களே!
எந்த யுகத்தில் இருக்கிறார்கள்?
என் சுத்த பிராமணப் பெற்றோர்கள்
செவிலித்தாய் வைக்கும்போது
பார்க்கிறார்களா ஜாதியை?
அவர்களுக்குத் தெரியுமா
அவளோடு செல்கையில்
எத்தனை ஜாதியினர்
என்னைக் கொஞ்சி
விளையாடுவ ரென்று?
——————————————————
ஆணாதிக்கம் அழிந்து
பெண்ணாதிக்கம் மலர்ந்ததா
தெரியாது.
அமரத்தெரிந்த நாளிலுருந்து
எனக்குத்தெரிந்த
ஆதிக்கம்
அரவணைப்பு
கைச்சுவை
என்
செவிலித் தாயினுடையதுதான்.
———————————–
ஊதியம் தேடி
என்னைப் பார்த்துக்
கொள்ள வந்திவிட்ட
அவள் குழந்தைகளை
யார் பார்ப்பார்?
——————————–
[எங்கள் அடுக்குமாடி இல்லத்தில், ஒரு ஞாயிறு உலாவின் போது கண்ட காட்சிகள், கேட்ட மழலைக் குரல்கள்]