பசுமை நிறைந்த எதிர்காலம்

Go green என்று உலகம் சொல்லளவில் நின்று தவித்துக்கொண்டிருக்கையில், இந்தியா ஏன் பசுமையை அரவணைக்கக் கூடாது என்று உலகுக்கு நியாயப் படுத்திக்கொண்டிருக்கையில், நம் முன் எழுவது நாளை உலகம் எப்படி பாதுகாக்கப்படும் என்கிற மலைப்பு. அந்த மலைப்பையும், தவிப்பையும் தள்ளிவைத்து ஆராய்ந்தால் கண்முன் விரிவது ஒரு மாபெரும் வாய்ப்பு.

 நீராவியின் உந்துதலில் வளர்ந்தது ஐரோப்பா. பெட்ரோல் இயந்திரங்களின் உந்துதலில் வளர்ந்தன அமெரிக்கா, ஜப்பான், வளைகுடா. நம் முன் அப்படியொரு வாய்ப்பு இப்போது கிடக்கிறது.

உலகப் பொருளாதரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை, தலைமை நிலையை நிர்ணயிக்கப்போவது ‘பசுமை’ தொழில்நுட்பங்கள். நிலக்கரியோ, பெட்ரோலோ, அணுசக்தியோ பெருமளவு நம்மிடம் இல்லாத இயற்கைவளங்கள். ஆனால் பசுமைத் தொழில்நுட்பங்கள் இயற்கை வளங்களை அழிக்காமல் உருவாக வேண்டியவை என்கிற காரணத்தாலேயே, ஒளியையும், காற்றையும் இதுவரை பயன்படுத்தாத இன்னபிறவற்றையும் கட்டுப்படுத்தத் தெரிந்த எவர் வேண்டுமானாலும் இத்துறைகளில் முன்னேறலாம். நாமும் தான்.

இத்துறைகளில் வளர்ந்த நாடுகள் இன்னமும் பெருவளர்ச்சி அடையவில்லை. பெருமளவு பணம் இன்னும் முதலீடு செய்யப்படவில்லை. ஓரளவு எல்லோரும் சம அளவு வளர்ச்சி(யின்மை)யில் தான் இருக்கிறோம். யார் முதலடி எடுப்பது என்று போராடிக்கொண்டிருக்கற மற்றவர்களுக்கு முன்னர் நம் முழுக் கவனமும் இங்கே திரும்பினால், நாளை உலகம் நமது கைகளில்.

பசுமையான கனவுகள் கண்டுதான் பார்ப்போமே. அணுசக்தித் தீண்டாமையிலிருந்து மீளப்போகிறோம். உலகிலேயே மலிவான பெட்ரோல் வாகனங்கள் செய்ய முயற்சித்து ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டோம்.  இவற்றோடு, அல்லது இவற்றிற்குப் பதிலாக, உலகிலேயே மலிவான (சூரியஒளி மாதிரி) மாற்றுசக்தி வாகனங்கள் செய்து பார்ப்போமே! மாற்று முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்து பார்ப்போமே. வெற்றிபெற்றால் உலகம் நம்மைப் பின்பற்றும். இதைவிடப் பெரிய பொருளாதார வாய்ப்பு நமக்குக் கிட்டாது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா இருந்த நிலையில் இன்று நாம் நிற்க முடியும் – அரசும், தனியார் நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் முனைப்போடு மனம் வைத்தால். 21ம் நூற்றாண்டின் ஹென்றி ஃபோர்ட் நம்மிடையே எங்கோ உலவிக்கொண்டிருக்கக்கூடும்; அவரை வளர விடுவோம்.

3 Responses to பசுமை நிறைந்த எதிர்காலம்

  1. […] வரை – டென்மார்க் பசுமைப் பாடம் பசுமை நிறைந்த எதிர்காலம் குறித்த என் முந்தைய பதிப்பை […]

  2. […] எதற்காக? இந்தத் தடங்கலை ஒரு வாய்ப்பாக மாற்ற முனையாமல், நம் அரசியல் தலைவர்களின் இந்த […]

  3. pasumai pandi சொல்கிறார்:

    idhu oru uruppadaadha naadu thalaiva………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: