பணர்கட்டா சாலையில்
பாலத்துக்கு அடியில் காரைவிட்டேன்.
‘அப்பா, பாலத்துக்கு மேல போகலாம்!’
‘இல்லைடா, நாம் நேராப் போகனும்’
‘பரவால்லப்பா, பாலத்துக்கு மேல ஓட்டு’
என் மகளோடான இந்த உரையாடல், அழகான கவிதைத் தருணமாய்த் தோன்றியது. ஆனால் கவிதை வேறொருவரால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்…
இதெல்லாம் ஒரு காரணமா?
- முகுந்த் நாகராஜன்
யாதார்த்தமான வரிகள். மனதில் நிற்கிறது.