தமிழன் மடிந்தான்.
தமிழன் பிடிவாதமாய்த்
தப்பவிடாமற் தடுக்கத்
தமிழன் மடிந்தான்.
தமிழன் கைகாட்டித்
துணைபோகத்
தமிழன் மடிந்தான்.
தமிழன் கைகட்டி
வாளாவிருக்கத்
தமிழன் மடிந்தான்.
சில தமிழர் மாற்றான்
கைப்பாவையாய்ச் சுழலத்
தமிழன் மடிந்தான்.
சில தமிழர் கை மையில்
கருத்தாயிருக்கத்
தமிழினம் மடிந்தது.
தமிழனுக்குத் தமிழனே சாலும்.
ஒன்னார் வழுக்கியும் கேடுறுவான்.
கெடுப்பார் கெடுக்கக்
கேட்கவும் வேண்டுமோ
நம்மிடரின் கொடுமையை?
கண்டோம் நாம்.
கண்ணீரும் கவிதையும்
குற்றவுணர்வின் குறுகுறுப்பும்
இயலாமையின் ஆற்றாமையும்,
முழுவதும் அறியாமையின் ஆறுதலும்
மட்டும் நம் கைவசம்.
[...] V.V.Ganeshananthan has written a moving article on dealing with grief on Granta magazine. As an Indian Tamil, who has helplessly watched an unbearable human tragedy unfold to his brethren in Srilanka, I am still struggling to come to terms with what my grief means and whether I am even eligible to grieve. [...]