ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், Animal Farm திரைப்படத்தை CIA மாற்றியமைத்ததாம்; படித்தபோது வியப்பாக இருந்தது. கம்யூனிஸத்தை வீழ்த்த அமெரிக்கர்கள் அபத்தத்தின் எல்லைகளை அளந்திருக்கிறார்கள்.
Animal Farm புத்தகத்தின் இறுதியில், நான் முன்பு எழுதியது போல், மனிதர்களின் கொடுங்கோல் ஆட்சியை மாற்றி பன்றிகளின் கொடுங்கோலாட்சி உருவாகிறது. மற்ற விலங்குகள் மனிதர்களையும் பன்றிகளையும் வேறுபடுத்த முடியாமல் மாறிமாறிப் பார்க்கின்றன.
இந்தக் காட்சியை, திரைப்படத்தில் திட்டமிட்டு மாற்றியிருக்கிறதாம் அமெரிக்க ஒற்று நிறுவனம். காட்சியிலிருந்து மனிதர்களை நீக்கிப் பன்றிகளை மட்டும் மையப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் முதலாலித்துவ மனிதர்களை மறக்கடித்து கம்யூனிஸ்ட்டுப் பன்றிகளை மட்டும் மட்டம் தட்டிவிட்டார்களாம். இருவரையுமே ஒரே தட்டில் வைத்த Orwell அப்போது மறுத்துப்பேச உயிரோடு இல்லை.
உலக அரசியல் அரங்கிலும் சிறுபிள்ளை விளையாட்டுகள் சாத்தியம்தான் போலும்.