போராளிகள் கவனிக்கவும்…

வன்முறையை விதைக்கிறவர்கள், வன்முறையை வாழ்க்கையாக்கிக்கொண்டவர்கள் வன்முறைக்ககே இரையாவது மறுபடி மறுபடி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.  பூட்டோ மரணம் மற்றுமோர் எடுத்துக்காட்டு. மிரட்டல்களுக்குப் பணியாத துணிவை, உலகத்தோடு சேர்ந்து நானும் பாராட்டுகிறேன். ஆனால் அவர் வளர அனுமதித்த வன்முறை விதைதான் வளர்ந்து, இன்று அவர் மீதே விஷக்காற்றை வீசியிருக்கிறது.

இந்திரா, ராஜீவ் மற்றும் பலரும் அத்தகைய தவறுகளின் விளைவுக்கு இரையானவர்களே! ஏன், மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாத காங்கிரஸின் இயலாமையோ முயலாமையோதான் காந்தியையே வன்முறைக்கு இரையாக்கியது. வாழ்க்கை முழுவதும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாமனிதனுக்கு வன்முறைதான் முற்றுப்புள்ளி வைத்தது - அவன் வளர்த்த இயக்கத்தின் தோல்வியால். ஆனால் மரணத்திற்குப் பின்னும், அந்த அமைதிக் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அமைதியால் மலர்ந்த இந்தியாவையும், அதே நேரத்தில் உதிரத்தில் பூத்த பாக்கிஸ்தானையும் பார்க்கிறவர்களுக்குப் புரியும் -அமைதிப் போரின் வலிமையும், வன்முறையின் ஆறாக்காயங்களும்.

ஆனால், இன்றைக்கும் போராளிகளும், வன்முறையாளர்களும் கூர்வாள்களும் தோட்டாக்களும் நிரந்திரத் தீர்வுகள் தேடித்தரும் என்று நம்புகிறார்கள்? குஜராத்தில் மோடி எத்தனை முறை வென்றாலும் அவர் வளர்த்த வன்ம விலங்கு விழுங்கக்காத்திருப்பது தெரியவில்லையா? இலங்கையில் ஒரு pyrrhic போர் நடத்திவருவது புலிகளுக்குப் புரியவில்லையா? நந்திகிராமில் வைத்த தீ தம்மையும் சேர்த்துப்பொசுக்கும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் அறியவில்லையா? உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் இந்த அறியாமைக்கு அழிவே இல்லையா?

ஒரு பதில் “போராளிகள் கவனிக்கவும்…” க்கு;

  1. ஈழப்போர் - தமிழக அரசியவாதிகளின் போர்வை « உரக்கச் சொல்வேன் சொல்வதென்னவென்றால்:

    [...] புலிகள் தம் இரக்கமற்ற வன்முறையைக் கைவிடும்வரை ஒரு பயங்கரவாத [...]

மறுமொழி இடுக